கச்சத்தீவு செல்ல முயன்ற 69 பேர் மதுரையில் கைது

மதுரையிலிருந்து கச்சத்தீவுக்கு சென்று இந்தியக் கொடி ஏற்றப்போவதாகக் கூறி புறப்பட்ட 69 பேரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

மதுரையிலிருந்து கச்சத்தீவுக்கு சென்று இந்தியக் கொடி ஏற்றப்போவதாகக் கூறி புறப்பட்ட 69 பேரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

   கச்சத்தீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலை முன்பு கூடினர். சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் கச்சத்தீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டனர்.

  தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் கைது செய்தனர். அவர்களை திருமண மண்டபத்தில் தங்கவைத்த பின்னர் மாலையில் விடுவித்தாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com