ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சென்னை பொறியியல் மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் கலையரசி (22). செவித்திறன் குறைவுடைய மற்றும் வாய்பேச இயலாத இவர், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் உள்ள

News image
Updated On :26 ஆகஸ்ட் 2013, 2:05 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த வாய் பேச இயலாத, செவித்திறன் குறைவுடைய சென்னையைச் சேர்ந்த மாணவி கலையரசி இன்று மாலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் கலையரசி (22). செவித்திறன் குறைவுடைய மற்றும் வாய்பேச இயலாத இவர், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பி.டெக். 6 ஆண்டு படிப்பில் கணினி அறிவியல் பிரிவில் இறுதியாண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த கலையரசி திங்கள்கிழமை வகுப்பிற்குச் சென்றுவிட்டு, மாலை விடுதி அறைக்கு வந்தவுடன் தூக்கிட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர், கலையரசி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டார். இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கலையரசியின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.