விதிமுறை மீறி நோட்டீஸ் ஒட்டியதாக மதுரை திமுக பிரமுகர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
மதுரை 4 ஆம் பகுதி திமுக பகுதிச்செயலராக இருப்பவர் ஜெயராமன். சமீபத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க மதுரை வந்தபோது அவரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதில் ஜெயராமன் சார்பில் போஸ்டர்கள் மாநகர் காவல் துறை போக்குவரத்து தடுப்புகள் மீது ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து அவர் மீது தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். மதுரை நகரில் திமுக நிகழ்ச்சிகளின் போது அனுமதியின்றி மாநகராட்சி மற்றும் அரசு அலுவலகச் சுவற்றில் போஸ்டர்கள் ஒட்டியதாக திமுக பிரமுகர் ஜெயராமன் மீது பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.