ஏற்காடு சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு அமைதியான முறையில் தொடங்கியது. மக்கள் மிகுந்த ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கியதுமே திமுக, அதிமுக வேட்பாளர்கள் வந்து வாக்களித்து சென்றனர். காலை பத்து மணிக்குள் 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் கூறும் போது பொதுவாக 10 மணி நிலவரப்படி 10 சதவீத வாக்குகள் தான் பதிவாகும் ஆனால் இந்த முறை இது அசாதாரணமானது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.