மதுரை மீனாட்சிநகர் பகுதியில் உள்ள ஆன்மிக மையத்துக்கு புதன்கிழமை நள்ளிரவு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
தியானம் உள்ளிட்டவை நடக்கும் ஆன்மிக மையத்தின் வாயில் முன்பு திடீரென சிலர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊமச்சிகுளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ஆன்மிக மையத்தின் முன்பு கூடியவர்கள் குறித்து விசாரித்துவருவதாகத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.