பெண்ணை மானபங்கப்படுத்தியதாக ஒருவர் கைது

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் சரகம்,வானதிரையன்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த தவசீலன் மனைவி மணிமேகலை(31). இவர் தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு குழந்தைகளுடன்
Published on
Updated on
1 min read

உடையார்பாளையம் அருகே பெண்ணை மானபங்கப்படுத்தியதாக இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் சரகம்,வானதிரையன்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த தவசீலன் மனைவி மணிமேகலை(31). இவர் தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கெங்காசலம் மகன் ரவி(37) என்பவர் வீட்டுக்குள் புகுந்து மணிமேகலையை மானபங்கப்படுத்தினாராம். இது குறித்த புகாரின்பேரில் உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார் வழக்குப் பதிந்து ரவியை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com