அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 11 பேர் தனியாக அடைக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :13 டிசம்பர் 2013, 12:49 pm

முத்துகுமார்

:பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் சிலர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 11 பேர் தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனியாக உணவு தயாரித்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தனியாக உணவு தயாரிக்க சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து அந்தக் கைதிகள் வெள்ளிக்கிழமை காலை உணவு சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து சிறைக் கைதிகள் மதிய உணவு சாப்பிட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.