இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரத்தில் பார்சல் சர்வீஸ் முகவர் தற்கொலை!

சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (48). இவருக்கு திருமணமாகி 3 வருடமாகிறது. மனைவி பெயர் காயத்திரி. ஒன்றரை வயதில் சிவக்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆனந்தன்

News image
Updated On :14 டிசம்பர் 2013, 12:16 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் தனது கடையில் பார்சல் சர்வீஸ் முகவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (48). இவருக்கு திருமணமாகி 3 வருடமாகிறது. மனைவி பெயர் காயத்திரி. ஒன்றரை வயதில் சிவக்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆனந்தன் பஸ்நிலையம் அருகே உள்ள கொத்தங்குடித்தெருவில் கடை வாடகைக்கு எடுத்து பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த டிச.12-ம் தேதி முதல் ஆனந்தன் வீட்டிற்கு வரவில்லை. கடையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை காலை கடை ஷட்டர் பாதி திறந்த நிலையில் இருந்தது. கடைக்கு உள்ளே ஃபேனில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது மனைவி காயத்திரி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.