கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரத்தில் நந்தனார் சிலை வீதிவலம்

சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தொன்று தொட்டு நடைபெற்று வரும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சிலை வீதிவலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2013, 3:34 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தொன்று தொட்டு நடைபெற்று வரும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சிலை வீதிவலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஓமக்குளத்தில் உள்ள ஸ்ரீநந்தனார் மடத்திலிருந்து ஸ்ரீநந்தனார் சிலை ஊர்வலம் புறப்பட்டு சபாநாயகர்தெரு, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி வழியாக வீதிவலம் வந்து மீண்டும் நந்தனார் மடத்தை அடைந்தது. தெற்கு சன்னதி முகப்பில் நந்தனார் ஆய்வு மைய அமைப்பாளர் ரா.காவியச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஊர்வலத்திற்கான ஸ்ரீநந்தனார் மடாதிபதி பழனிவேலு, சகஜானந்தா கல்வி வளர்ச்சிக்கழக துணைச் செயலாளர் பொறியாளர் கலியமூர்த்தி, ஆசிரியர் மு.ஆ.தமிழ்க்குமரன், நந்தனார் ஆண்கள் விடுதி காப்பாளர் ப.பெருஞ்சித்திரன், செ.பேரறிவாளன், ரா.முத்தையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்த நந்தனார் ஆய்வு மையத்தினர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.