எஞ்சின் கோளாறு: பொதிகை எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்

எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு வண்டி கிளம்ப தாமதம் ஆனது.
Updated on
1 min read

எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு வண்டி கிளம்ப தாமதம் ஆனது.

மாலை 7 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய ரயில், எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கிளம்பவில்லை. பொறியாளர்கள் எஞ்சின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ரயில் 2 மணி நேரம் தாமதம் ஆனது. இரவு 9.05க்கு செங்கோட்டையில் இருந்து ரயில் கிளம்பிச் சென்றது. காலை 7.05க்கு சென்னை எழும்பூரைச் சென்று சேர வேண்டிய பொதிகை எக்ஸ்பிரஸ் இதனால் காலை மிகத் தாமதமாக சென்று சேரும் என்று கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com