வெறிநாய்கள் கடித்து 17 செம்மறி ஆடுகள் பலி

வெள்ளக்கோவில் அருகே சுப்பிரமணியக் கவுண்டன்வலசை பகுதியில் செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் கடித்தனவாம்.
Updated on
1 min read

வெள்ளக்கோவில் அருகே சுப்பிரமணியக் கவுண்டன்வலசை பகுதியில் செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் கடித்தனவாம். இதில் பாதிக்கப்பட்ட 17 ஆடுகள் இன்று உயிரிழந்தன. இது குறித்து அறிந்த காங்கயம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் என்.எஸ்.நடராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்றனர் அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com