மதுரை: வழக்குரைஞர்கள் சாலை மறியல்

மதுரையில் வழக்குரைஞர்கள் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

மதுரையில் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்ட வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக மதுரை மாவட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று காலை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து கோரிப்பாளையம் வந்தனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து கிளம்பி நீதிமன்றத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com