பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி துவங்கியது. 500க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க,
Updated on
1 min read

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி துவங்கியது. 500க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் உள்ளனர். இந்தப் போட்டிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதிவு செய்துள்ள இளைஞர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும். மேலும் முன்னரே பதிவு செய்யப்பட்ட காளைகள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கு பெறுகின்றன. அவற்றின் அங்க அடையாளங்களை வைத்து, இன்று காலை சோதிக்கப்பட்டு பின்னர் மாடுகள் களத்தில் இறக்கப்பட்டன. அதுபோல், போட்டியில் பங்குபெறும் இளைஞர்களுக்கும் மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com