

விஸ்வரூபம் படப் பிரச்னை தொடர்பாக கமல்ஹாசன் மீண்டும் முஸ்லிம் அமைப்புத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்ட பிரச்னை குறித்து, நடிகர் கமல்ஹாசன் மீண்டும் முஸ்லிம் அமைப்பினரை அழைத்துப் பேசி, சுமுகத் தீர்வு காண வேண்டும் என்றார்.
மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வரும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் மத்திய அரசு அரசிதழில் வெளியிடும் என்று தெரிகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றும் கூறினார் ஜி.கே.வாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.