தில்லி மாநகரப் பேருந்துகளில் அலாரம் : ஷீலா தீட்சித் அறிவிப்பு

தில்லி மாநகரப் பேருந்துகளில் அலார வசதி அமைக்கப்படும் என்று புது தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.
Published on
Updated on
1 min read

தில்லி மாநகரப் பேருந்துகளில் அலார வசதி அமைக்கப்படும் என்று புது தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.

பேருந்துகளில் பெண்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் இந்த அலாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பினை பெறலாம் என்றும் அவர் தெரிவித்தள்ளார்.

இதற்காக, அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் அலார வசதியைப் பொருத்துமாறு தான் போக்குவரத்துத் துறையைக் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் தில்லி முதல்வர்.

இது குறித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமகாந்த் கோஸ்வாமி, சில வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளில் அலார வசதி ஏற்கனவே உள்ளது. தற்போது அனைத்து பேருந்துகளிலும் அலார வசதி அமைக்கப்பட உள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com