குற்றாலத்தில் நேற்று மாலை முதல் மிதமான சாரல் மழை அவ்வப்போது விட்டுவிட்டுப் பெய்தது. பலத்த மழைப் பொழிவு இல்லை. இதனால் அருவியில் மிதமான அளவில் குளிப்பதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் விழுந்தது.
அருவியில் பயணிகள் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். பேரருவி, ஐந்தருவியில் ஆண்கள், பெண்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். ஞாயிற்றுக் கிழமை நேற்று இருந்த கூட்டம் இன்று இல்லை என்ற போதிலும், திங்கள்கிழமை இன்று காலை ஓரளவு கூட்டம் அதிகமாகவே இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.