மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறி புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று, புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் இயங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சிடி ஸ்கேன் எடுக்க வந்த நோயாளிகள், சிடி ஸ்கேன் மையத்தை அடித்து நொறுக்கினர்.
இதேப்போல, நேற்று இரவு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்த நோயாளிகள் சிலர், சிகிச்சை அளிக்க காலதாமதமாகிறது என்று கூறி மருத்துவமனையின் சில பகுதியை அடித்து நொறுக்கினர்.
இதனால், மருத்துவமனையில் பணியாற்றும் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி, மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் இன்று வேலை நிறுத்தம் அறிவித்து மருத்துவமனைக்கு வெளியே இருந்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், சிகிச்சை அளிக்கப்படாததால், ஆத்திரமடைந்து ஆம்பூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்து வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


