சிறுபான்மையினரின் புனித யாத்திரைக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும், மதச்சார்பற்றது எனக் கூறிக்கொள்ளும் மத்திய அரசு, உத்தரகண்டில் ஹிந்து யாத்ரீகர்களைக் காக்க போதிய முன்னெச்சரி்க்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.இந்த பேரிடருக்கு இயற்கை காரணம் என்ற போதும், அதிக உயிர்ச்சேதத்துக்கு மனிதத் தவறே காரணம். சிறுபான்மையினரின் வாக்குவங்கி என்ற மாயைக்காக, பெரும்பான்மை ஹிந்துக்களை அரசியல் கட்சிகள் புறக்கணிக்கின்றன என்றார் அவர். பேட்டியின் போது, இந்து மக்கள் கட்சி புதுச்சேரி மாநிலத் தலைவர் மஞ்சினி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.