மதுரை நகைக்கடையில் மோசடி: மேற்பார்வையாளர் கைது

மதுரையில் தெற்கு மாசித் தெருவில் உள்ள தனியார் நகைக் கடை ஒன்றில் ஒரு கிலோ தங்க நகைகளை மோசடியாக எடுத்துக் கொண்டதாகக் கூறி மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Updated on
1 min read

மதுரையில் தெற்கு மாசித் தெருவில் உள்ள தனியார் நகைக் கடை ஒன்றில் ஒரு கிலோ தங்க நகைகளை மோசடியாக எடுத்துக் கொண்டதாகக் கூறி மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் அண்மையில் ரூ.30 லட்சம் நகைகள் மாயம் ஆகின. இது குறித்து புகார் தரப்பட்டது. நகைக்கு ஆர்டர் வாங்கி செய்து கொடுக்கும் போது மோசடி செய்ததாக, மேற்பார்வையாளர் சுந்தரேசன் சுரேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். இவர்களில் இருவர் கைதான நிலையில், இன்று சுந்தரேசன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com