குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை

குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இன்று காலை முதலே சாரல் நன்றாக இருந்தது. விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் சுமார் ஒரு வாரத்துக்குப் பிறகு  அருவிகளில் அபாய அளவைத் தாண்டி நீர் கொட்டியது.
Updated on
1 min read

குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இன்று காலை முதலே சாரல் நன்றாக இருந்தது. விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் சுமார் ஒரு வாரத்துக்குப் பிறகு  அருவிகளில் அபாய அளவைத் தாண்டி நீர் கொட்டியது. இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 4 மணிக்குப் பிறகு அருவியில் நீரின் வேகம் அதிகரிக்கவே,  4.40 மணி அளவில் குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அருவி நீர் அளவு குறைந்தால் தடை உடனே நீக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com