மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூரில் மீன்பிடிக்கச் சென்ற மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி

கடலூரில் மீன்பிடிக்க கட்டுமரத்தில் சென்ற ஐடிஐ மாணவர், தண்ணீரில் மூழ்கி பலியானார்.

Updated On :23 ஜூலை 2013, 7:51 am

கடலூரில் மீன்பிடிக்க கட்டுமரத்தில் சென்ற ஐடிஐ மாணவர், தண்ணீரில் மூழ்கி பலியானார்.

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த உத்ராபதி மகன் ஆனந்தராமன் (18), அதேப் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் சங்கேஸ்வரனுடன் (19) திங்களன்று துறைமுக முகத்துவாரமான பரவனாறு பகுதியில் மீன்பிடிக்க கட்டுமரத்தில் சென்றார்.

அப்போது திடிரென கட்டுமரம் கவிழ்ந்ததில் இருவரும் தண்ணீரில் விழுந்தனர். ஆனால், சங்கேஸ்வரன் நீந்தி கரையேறினார். ஆனந்தராமனை காணவில்லை. தீயணைப்புத் துறையினர் நேற்று இரவு முழுவதும் தேடினர். இதற்கிடையே இன்று காலை துறைமுகம் அருகே அவரது உடல் கரைஒதுங்கியது. ஆனந்தராமன் ஐடிஐயில் இரண்டாமாண்டு பயின்று வந்த மாணவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.