பண்ருட்டியில் விவசாயி வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியவர் கைது
பண்ருட்டியில், விவசாயியின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


பண்ருட்டியில், விவசாயியின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பண்ருட்டி வட்டம் சிறுதொந்தமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் (50). செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தங்கவேலின் கூரை வீடு மீது பெட்ரோலை ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினார். உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததும், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். இதில் பாதி வீடு சேதம் அடைந்தது.
பெட்ரோல் ஊற்றி வீட்டை கொளுத்திவிட்டு தப்பியோடிவரை ஊர் பொதுமக்கள் பிடித்து விசாரித்ததில், அவர் அதேப் பகுதி அம்பலவானன் பேட்டைமையச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (30) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, தாடாம்புலியுர் காவல்துறையிடம் சௌந்தர்ராஜன் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...