மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிலையம் அருகே திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.