தென்காசி அருகே வாகனம் மோதி 2 பேர் பலி

தென்காசி அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி.....
Updated on
1 min read

தென்காசி அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலியாயினர்.

தென்காசி அருகே வேட்டைக்காரன்குளம் பேருந்து நிறுத்தம் அருகே பாவூர்சத்திரத்தை சேர்ந்த சிவராஜன், ஜெகதீஷ்குமார் இருவரும் தங்கள் இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவு பாவூர்சத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிவராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒரு அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரும் பலியானார். இது குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com