லாரி எரிப்பு வழக்கு:தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருவண்ணாமலை அருகே பெட்ரோல் குண்டு வீசி, கன்டெய்னர் லாரி எரிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Updated on
1 min read

திருவண்ணாமலை அருகே பெட்ரோல் குண்டு வீசி, கன்டெய்னர் லாரி எரிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஏப்ரல் 30 முதல் மே 11 வரை வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

மே 2-ம் தேதி அதிகாலை திருவண்ணாமலை-செங்கம் சாலை, அத்தியந்தல் ஏரிக்கரையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரியை மர்ம நபர்கள் வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர். இதில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்கர் கான் (24) இறந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் 17 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். மூவர் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஒருவர் மட்டும் தலைமறைவாக உள்ளார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில்:

கைது செய்யப்பட்டவர்களில் ஏற்கெனவே மூவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இப்பொழுது 4-வதாக பெரிய கோட்டாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பட்டுசாமி (35) என்பவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான ஆட்சியர் விஜய் பிங்ளேவின் உத்தரவு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பட்டுசாமியிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com