4 வழிச்சாலை அமைக்கும் நிறுவனத்திடம் லஞ்சம்: வணிகவரி தணிக்கை அதிகாரி கைது

மதுரையில் 4 வழிச்சாலை அமைக்கும் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வணிக வரித்துறை அதிகாரி உள்ளிட்ட இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
Updated on
1 min read

மதுரையில் 4 வழிச்சாலை அமைக்கும் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வணிக வரித்துறை அதிகாரி உள்ளிட்ட இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மதுரையில் தணிக்கை அலுவலக அதிகாரியாகப் பணியாற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த சந்திரன், அலுவலக உதவியாளர் ராமசாமி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

4 வழிச் சாலை பணியில், பணி முடிந்த பணம் மீதான விவகாரத்தில், தணிக்கை அதிகாரி லஞ்சம் கேட்டதாகவும், அந்த நிறுவனம் சென்னை சிபிஐயிடம் புகார் அளித்ததன் பேரில், தனிப்படை இருவரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.1லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்து, அவர்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com