மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் தினகரன். இவருடைய மனைவி மீனாட்சி பிரசவத்துக்காக வெள்ளிக்கிழமை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெள்ளிக்கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை குழந்தையை மீனாட்சியிடம் இருந்து பாட்டி கேட்டதாகக் கூறி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பிறகுதான் பாட்டியிடம் குழந்தை சேரவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து, வெகு நேரம் ஆகியும் குழந்தையைக் காணாததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. அப்போதுதான், குழந்தை கடத்தப்பட்டது தெரிய வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், தற்போது மேலும் குழந்தைக கடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.