மதுரை மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்னர் பிறந்து ஒரு நாளேயான குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, தங்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதாக செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து, மருத்துவமனை டீன் முன்னர் அவர்கள் போராட்டம் நடத்தியதுடன், மருத்துவமனைக்கு வெளியே நின்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். செவிலியர்கள் பணிக்குச் செல்லாததால், மருத்துவமனையில் நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். இதனால் காலையில் மதுரை மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.