கடையநல்லூரில் வேன்-தள்ளுவண்டி மீது அரசு பேருந்து மோதியதில் 11 பேர் காயம்

ராஜபாளையம் அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்த சிலர் வேனில் குற்றாலம் சென்று விட்டு இன்று காலை ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனராம்.இவர்கள் அனைவரும் கடையநல்லூர் நகராட்சி ஆணையர்
Published on
Updated on
1 min read

கடையநல்லூரில் வேன் மற்றும் தள்ளுவண்டி மீது அரசு பேருந்து மோதியதில் 11 பேர் காயமடைந்தனர்.

ராஜபாளையம் அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்த சிலர் வேனில் குற்றாலம் சென்று விட்டு இன்று காலை ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனராம்.இவர்கள் அனைவரும் கடையநல்லூர் நகராட்சி ஆணையர் குடியிருப்பு அருகேயுள்ள கடையில் டீ குடித்து விட்டு வேனில் ஏறி உட்கார்ந்து இருந்தார்களாம்.அதே இடத்திலுள்ள குடிநீ்ர் குழாயில் மேலக்கடையநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமார்(38) குடங்களில் தண்ணீர் பிடித்து தள்ளுவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தாராம்.

அப்பொழுது,புளியங்குடியிலிருந்து,கடையநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தள்ளுவண்டி மற்றும் வேன் மீது மோதியதாம்.இதில் வேனில் பயணம் செய்த கோவிலூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(50),தர்மர்(32),கனகராஜ்(37),திருப்பதிகண்ணன்(25),மதன்குமார்(18),அசோக்குமார்(18),மணிகண்டன்(18),சிவகுமார்(33),கார்த்திக்(29),ராஜலிங்கம்(32) மற்றும் மேலக்கடையநல்லூர் முத்துக்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கடையநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com