மதுப்பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

மதுரையில் விதியை மீறி மதுப்பாட்டில்கள் விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 12 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Updated on
1 min read

மதுரையில் விதியை மீறி மதுப்பாட்டில்கள் விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 12 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 நகரில் பல இடங்களில் அரசு மதுக்கடைகள் அடைத்த பிறகும் மதுப்பாட்டில்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து போலீஸார் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் மது விற்றதாக புதூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 6 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

   அதேபோல கீரைத்துறை சிந்தாமணி பகுதியில் விதியை மீறி மது விற்பனை செய்ததாக காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 6 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com