மதுரை திருமங்கலம் அருகே புள்ளி மான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை திருமங்கலம் அருகே ராயபுரம் என்ற பகுதியில் புள்ளி மான் ஒன்று உடலில் காயத்துடன் இறந்து கிடந்தது. தகவல் அறிந்ததும், மதுரை மாவட்ட வனத்துறையினர் சென்று புள்ளி மானின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களில் மதுரை திருமங்கலம் வனப் பகுதியில் காட்டெருமை மற்றும் 4 புள்ளி மான்கள் மர்மாக இறந்து கிடந்தன. எனவே, இப்பகுதியில் யாரேனும் விலங்குகளை வேட்டையாடுகின்றனரா என்று அடிப்படையில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.