மதுரையில் செல்லூர் கண்மாயில் குப்பை கொட்டி மாசுபடுத்திய மாநகராட்சியைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை பீபிகுளம் பகுதியில் இருந்து கசடுகள், குப்பைகளை லாரிகளில் எடுத்து வந்து செல்லூர் கண்மாயில் நேற்று இரவு முதல் மாநகராட்சியினர் கொட்டியுள்ளனர். இன்று காலை அவற்றைக் கண்ட மக்கள் பெரும் ஆத்திரமடைந்தனர். கடந்த சில நாட்களாக செல்லூர் பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், கண்மாயில் நீர் தேங்கினால்தான் நிலத்தடி நீர் உயர்ந்து தங்களுக்கு நீர் கிடைக்கும் என்றும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், மாநகராட்சியினரின் இந்தச் செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து மாநகராட்சி லாரிகளை சிறைப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள், மாநகராட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.