
அச்சன்புதூர் அருகே தாமிரவருணி குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பின் காரணமாக அச்சன்புதூர்,நெடுவயல் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு்ள்ளது.
அச்சன்புதூர் அருகே தாமிரவருணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு குடிநீர் வெளியேறி அருகேயுள்ள நிலங்களில் வீணாக பாய்ந்து வருகிறது.இதன் காரணமாக அச்சன்புதூர்,நெடுவயல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கடும் கோடை வெயிலின் காரணமாக அடிகுழாய்களில் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், தாமிரவருணி திட்ட குடிநீரை நம்பியே இப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.எனவே உடனடியாக உடைப்பினை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.