குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் பலத்த மழைப்பெய்தது இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப்பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பலத்த மழைப் பெய்து வருகின்றது. கடந்த சில மாதங்களாக வறட்சி நிலவிய குன்னூரில் தற்போது பெய்துள்ள மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தற்போது பலத்த காற்றுடன் மழைப் பெய்து வருவதால் தேயிலை செடிகளில் உள்ள கொளுந்துகள் உதிரத்து துவங்கியுள்ளன.இதன் காரணமாக தேயிலை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.