பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண்: மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் நெல்லை மாவட்டத்தில் தென்காசி மற்றும் புளியங்குடியில் இரு மாணவிகள்

Updated On :12 மே 2013, 5:06 pm IST

பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதி்ப்பெண் கிடைக்காததால் நெல்லை மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் நெல்லை மாவட்டத்தில் தென்காசி மற்றும் புளியங்குடியில் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.மாவட்டத்தில் தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மாணவியர் இருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து மாவட்ட ஆட்சியர் சி. சமயமூர்த்தி வேதனை தெரிவித்திருந்தார். மாணவர், மாணவியருக்கு தற்கொலை எண்ணம் ஏற்படாத வகையில் பெற்றோர்கள் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மேலும் ஒரு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள மேட்டு பிராஞ்சேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லையா மகள் செல்வலெட்சுமி (17). இவர் நல்லம்மாள்புரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் பிள்ஸ் 2 படித்தார்.கடந்த 9-ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வில் செல்வலெட்சுமிக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லையாம். இதனால் விரக்தியில் காணப்பட்ட அவர்,  நேற்று(சனிக்கிழமை) இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இரவு 11 மணியளவில் அவர் இறந்தார். இது தொடர்பாக கங்கைகொண்டான் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.