ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இருவர் கைது

வத்திராயிருப்பு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன், வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் ஹர்ஷனி ரெக்கரேசன் கிளப் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிறிஸ்டியான்பேட்டை, நடுத்தெருவைச் சேர்ந்த தெற்குமலை மகன்

News image
Updated On :13 மே 2013, 9:13 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன், வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் ஹர்ஷனி ரெக்கரேசன் கிளப் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிறிஸ்டியான்பேட்டை, நடுத்தெருவைச் சேர்ந்த தெற்குமலை மகன் பாலமுருகன் (27), இதே இடத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் ஜெயசீலன் (33) ஆகியோர் பொது இடத்தில், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டு, சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இது குறித்து சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.