புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுஷ்டிப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 22-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2013, 11:00 am

ஜி.சுந்தரராஜன்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 22-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நாடாளுமன்ற தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் டி.சுரேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் என்.பழனி, ஜி.கே.குமார், வயலூர் எம்.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சச்சிதானந்தம் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். தவிர்த்தாம்பட்டு விஸ்வநாதன் காந்திசிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட துணைத் தலைவர் பி.வெங்கடேசன், மாவட்ட பொதுச்செயலாளர் சி.பி.ரத்தினம், மாவட்ட பொதுச்செயலாளர் கே.நாகராஜ், ஆர்.சம்பந்தமூர்த்தி, இளங்கோவன், எம்.கே.பாலா, டாக்டர் சந்திரகாசன், டாக்டர் ரவிச்சந்திரன், துரை.முருகன், எம்.வெங்கடேசன், டி.தினேஷ், எஸ்.சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.