பெண் கொலை: 3 பேர் சிக்கினர்

மதுரை அருகே சாப்டூர் பகுதியில் கடந்த வாரம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் பிடித்துள்ளனர்.
Updated on
1 min read

மதுரை அருகே சாப்டூர் பகுதியில் கடந்த வாரம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் பிடித்துள்ளனர்.

   சாப்டூர் அருகே உள்ளது சின்னவண்டாரி. இவ்வூரைச் சேர்ந்த வைரமணி மனைவி முத்துலட்சுமி (42). கடந்தவாரம் அவர் தலை உள்ளிட்டவற்றில் பலத்த காயங்களுடன் சடலமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார். இதுதொடர்பாக சாப்டூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

  விசாரணையில் முத்துலட்சுமியை அதே பகுதியைச் சேர்ந்த மாயன் மகன் முத்துராஜ் உள்ளிட்ட இருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் பிடித்தனர். மேலும் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்தாக அமீர் என்பவரையும் போலீஸார் பிடித்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com