உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடந்த நூலக புரவலர் சேர்க்கையில்,ஆலங்குளம் நூலகம் அதிக புரவலர்களை சேர்த்து மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்தது.
இது குறித்து ஆலங்குளம் கிளை நூலகர் அ.பழனீஸ்வரன் கூறியதாவது:
தமிழக அரசின் கல்வி அமைச்சர் உத்தரவையொட்டி,உலக புத்தக தினத்தை முன்னிட்டு 23.4.2013 முதல் 22.5.2013 வரை,அதிகளவில் உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்க்கை ஆலங்குளம் நூலகத்தில் நடைபெற்றது.
இதில் ரூ.1000 செலுத்தி நூலகத்தில் 50 பேர் புரவலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.இது மாவட்ட அளவில் முதலிடமாகும்.மொத்தம் ஆலங்குளம் நூலகத்தில் 135 பேர் புரவலர்களாகவும்,3120 பேர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்ததால்,ஆலங்குளம் நூலக பணியாளர்களையும் , வாசகர் வட்ட தலைவர் கே.எஸ்.தங்கசெல்வம் ஆகியோரையும் மாவட்ட நூலக அலுவலர் சு.மந்திரம் பாராட்டினார் என்றார் அவர்