அரசு கல்லூரிகளில் பி.காம், பிஎஸ்சி., பி.ஏ படிப்புகளில் ஆங்கில வழிப்பிரிவு மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதுவதற்கும். செய்முறை பயிற்சியை தமிழில் எழுதுவதற்கும் வாய்ப்பிருந்தால்தான் கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறபடுத்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதி பட்டம் பெற முடியும். இச்சமூகங்களிலிருந்து வரும் ஆசிரியர்களும், ஆங்கிலமும் தமிழும் கலந்து வகுப்பு நடத்த வாய்ப்பிருப்பதால்தான் அவர்களும் பாடம் நடத்த முடிகிறது. அனைத்தையும் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற தமிழக அரசு உயர்கல்வித்துறையின் இந்த ஆணை 80 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் தடுத்து, தாழ்வு மனப்பான்மையில் தள்ளிவிடும்.