ஞாயிற்றுக்கிழமை மதியம் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டாட்சியர் எம்.விஜயா, ஏடிஎஸ்பி ராஜன், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், பி.முருகானந்தம், தனிப்பிரிவு தலைமைக்காவலர் செந்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், மாநில துணைச் செயலாளர் திருமாறன், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன், நிர்வாகிகள் நீதிவளவன், அதியமான், குறிஞ்சிவளவன், நிலவழகன், அண்ணாதுரை மனைவி சாரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.