எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தியுள்ள டீசல் விலையேற்றத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மாதந்தோறும் உயர்த்தப்படும் இந்த டீசல் விலையேற்றத்தால் லாரித் தொழில் மென்மேலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்து வருவதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.15 குறைத்தும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்த்தியும் அமல்படுத்தியுள்ளன. இதில், மாநில அரசின் விற்பனை வரியை சேர்க்கும்போது தமிழகத்தில் டீசல் லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்துள்ளது.
ஜனவரி 1-ம் தேதி முதல் 12-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ள இந்த டீசல் விலையேற்றத்தால் லாரி போக்குவரத்துத் தொழிலை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.