மதுரை அருகே பொய்கைக்கரைப்பட்டியில் பள்ளி மாணவியர் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மதுரை அருகே உள்ளது பொய்கைக்கரைப் பட்டி. இங்குள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியர் சிலர், இன்று காலை திடீரென வகுப்பறையில் வாழைப்பழம் சாப்பிட்டனர். அதில், விஷம் வைத்து தின்றதால் உடனே மயங்கி விழுந்துள்ளனர். உடனே அவர்கள் ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
தலைமை ஆசிரியை கண்டித்ததால், விஷ மருந்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டதாக விசாரணையில் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.