விருதுநகர் அருகே ஆமத்தூரில் பாட்டியின் கண்முன்னே லாரி மோதி குழந்தை பலியானது.
ஆமத்தூரைச் சேர்ந்த தொழிலாளி ஜெகதீஸ் என்பவரின் மகள் லலிதாஸ்ரீ(2). இவர் செவ்வாய்கிழமை வீட்டிற்கு எதிரே பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே ஒடும் போது வத்திராயிருப்பில் இருந்து சிவகாசிக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தது. இது குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.