மதுரை அருகே புதுக்கோட்டையில் இருந்து வந்த தனியார் பஸ் ஒன்று, ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பில் வேகமாக வந்து திரும்பியபோது சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த 16 பேர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வலது கை துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்தில், சென்னை, புதுக்கோட்டை, மதுரையைச் சேர்ந்த ஆண்கள் 9 பேர், பெண்கள் 6 பேர், ஒரு குழந்தை ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரு மாதங்களில் இதே இடத்தில் இதுவரை மூன்று வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.