மதுரை மதுரை தபால் தந்தி நகர் நட்சத்திர நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்.இவரது மகன் ரோஹித் 7ம் வகுப்பு படித்து வந்தார்.இன்று மாலை 4.30 மணி அளவில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவர் கடத்தபட்ட நிலையில் மாணவன் ரோஹித் பொற்றோர்களிடம் மர்ம நபர் பேசிய தகவலையடுத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு சம்பவம்:
மதுரை தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் பள்ளி முடிந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என தெரிகிறது.இது குறித்து மதுரை நகர போலீஸர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.