சிதம்பரம் அருகே துணிஞ்சிரமேடு எனுமிடத்தில் இன்டர்நேஷனல் அதீனா குளோபல் பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் யுகேஜி மாணவர் நிஷாந்தன் கல்வி கட்டண நிலுவைத் தொகை கட்டவில்லை எனக்கூறி ஆசிரியை ரம்யா என்பவர் அவரை அடித்து பள்ளி முகப்பில் உள்ள காவலாளி அறையில் உட்கார வைத்ததாகக் கூறப்படுகிறது. மாலை மாணவரை அழைக்கைச் சென்ற மாணவரின் தந்தையும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சிவக்குமார் விபரம் அறிந்து உள்ளே சென்று பள்ளி நிர்வாகி அப்துல்வகாப், முதல்வர் பாலதண்டாயுதம் ஆகியோரிடம் தனது மகனுக்கான கல்விக்கட்டணம் முழுவதையும் வங்கி மூலம் கட்டிவிட்டதாகவும், அப்படியிருக்கையில் ஏன் அடித்து வெளியில் உட்கார வைத்துள்ளீ்ர்கள் என கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பள்ளி டிரைவர் செந்தில், சிவக்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து மகனும், தானும் தாக்கப்பட்டது குறித்து தந்தை சிவக்குமார் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு புகார் தெரிவித்தார்.