இந்நிலையில் மனைவி மணிமேகலையிடம் தந்தை மேலும் பணம் வாங்கி வருமாறு கணவர் ஜெயமுருகனும், அவரது தந்தை சக்கரவர்த்தியும் அடித்து துண்புறுத்தி வந்ததாகவும், தற்போது பணம் வாங்கி வரவில்லையென்றால் வெட்டிக் கொலை செய்து புதைத்து விடுவோம் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மணிமகேலை சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு கணவர் ஜெயமுருகன், மாமனார் சக்கரவர்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர்.