மகளிர் திட்டம் சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை வருகிற டிச.4-ம் தேதி நடத்தப்பட
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை வருகிற டிச.4-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.

இது குறித்து மகளிர் திட்ட அலுவலர் பிச்சை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

இந்த முகாம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி வளாகத்தில் குறிப்பிட்ட நாளில் காலை 10-மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை 4 மணி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து தொடங்கி வைக்கவும் உள்ளார்.இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்கள் மற்றும்  தொழிலாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். அதனால் குறைந்தது 10-வது தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்த இருபாலரும் தங்கள் அசல் சான்றிதழ்கள், தொழில் பயிற்சி கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். எனவே வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மகளிர் திட்ட அலுவலர் பிச்சை கேட்டுக் கொணடுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com