வேண்டுகோளை ஏற்று இருவரது குடும்பத்தினருக்கு தலா ரூ1 லட்சம் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனடிப்படையில் சிதம்பரம் அருகே வேளக்குடியில் மின்சாரம் தாக்கி இறந்த ஹரிதாஸ் மனைவி சுமதிக்கும், சுப்பிரமணி மனைவி சாந்திக்கும் தலா ரூ ஒரு லட்சத்திற்கான காசோலையை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார். எம்எல்ஏவுடன் சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா, வருவாய் உதவியாளர் பழனியப்பன், வல்லம்படுகை ஊராட்சி மன்ற தலைவர் ஆறு.கலையரசன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், குமராட்சி ஒன்றியச் செயலாளர் மாசிலாமணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.